Saturday, July 7, 2012

விளம்பரங்கள் மக்களை உடனடியாக எந்த அளவிற்கு போய் சேர்கிறது என்பதனை, நேற்று முதல் வெளி வரும் சினேகா, பிரசன்னா பிரிவிற்கு என்ன காரணம் என்ற விளம்பரமே சாட்சி. தனியார் செல்போன் விளம்பர




விளம்பரங்கள் மக்களை உடனடியாக எந்த அளவிற்கு போய் சேர்கிறது என்பதனை, நேற்று முதல் வெளி வரும் சினேகா, பிரசன்னா  பிரிவிற்கு என்ன காரணம் என்ற விளம்பரமே சாட்சி. தனியார் செல்போன் விளம்பர நிறுவனம் தனது ஆடி மாத விற்பனையை அதிகரிக்க புது யுக்தியை கொண்டு விளம்பரப்படுத்தி வருகிறது, இந்த விளம்பரம் சினேகா பிரசன்னா பிரிவிற்கு என்ன காரணம் என்ற விவரத்தை தெரிஞ்சுக்க குறிப்பிட்ட எண்ணிற்கு எஸ் எம் எஸ் பண்ணுங்க என்று வருகிறது. இதனை  பார்த்து என்ன ஏதோ பிரச்னை போல என்று எல்லாரும் சினேகா, பிரசன்னாவிடம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர், நாமும் நம் பங்கிற்கு அவர்களிடம் கேட்டோம், அதற்கு அமைதியாக பதில் சொன்ன சினேகா- பிரசன்னா, தொலை பேசி நிறுவனம் ஒன்று எங்களை அணுகி விளம்பரம் குறித்து  தான் கேட்டனர் , நாங்களும் ஒத்துகொண்டோம். ஆனால் இவ்வாறு விளம்பரம்  பார்த்ததும் கொஞ்சம்  நாங்களும் அதிர்ச்சி ஆகி விட்டோம். வழக்கமா புது மண தம்பதிகளை ஆடிமாதம் பிரித்து வைப்பது வழக்கம் , அது போல சினேகா இந்த ஆடி மாதத்திற்கு அவர் அம்மா வீட்டுக்கு போனாராம். இந்த ஆடி மாத பிரிவை செல் போன் நிறுவனம் புது வியாபாரத்தை துவக்க திட்ட மிட்டுள்ளனர்.  இதை பார்த்ததும் சினேகா கொஞ்சம் டென்சன் ஆகி அந்த நிறுவனத்திடம் பேசி கொஞ்சம் மாற்றி விளம்பரத்தை அமைக்க கேட்டு கொண்டாராம், எனவே ரசிகர்களே செல் போன் நிறுவன விளமபரத்தை வைத்து யாரும் வருத்தம் அடைய வேணாம் என்று இணை பிரியா நட்சத்திரங்கள் நம்மிடம் கேட்டு கொண்டனர்.

No comments:

Post a Comment